தரணியிலே ஒளி பிறக்கும்!
தை மகளின் வருகையிலே,
பரணி சொல்லும் வழி பிறக்கும்!
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்க
வேண்டும் என்ற சிந்தனையைத் தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாகக் குலவையிட்டுப் பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித் ததும்பும் விழா. கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால்
பொட்டிட்டும், அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்‘என்று சூரியனைப் பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு.
நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழிய
பொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்த
மகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்
பண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .















































